உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த நின்னைகரை ஏரியில் நேற்று காலை, ஆண் சடலம் மிதப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார்? ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி இறந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ