உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்விளக்கு இல்லாத சாலை வில்லியம்பாக்கத்தில் அச்சம்

மின்விளக்கு இல்லாத சாலை வில்லியம்பாக்கத்தில் அச்சம்

மறைமலைநகர்:வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலை 5 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை ஆத்துார், வடகால், கொளத்துார் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து போக்குவரத்து இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகளே அதிக அளவில் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடையின் இருபுறமும், 1 கி.மீ., துாரம் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதியடைந்து வருகின்றனர்.டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் மது அருந்திவிட்டு வேகமாக செல்வதால், சக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி