படகு கவிழ்ந்து மீனவர் பலி
மாமல்லபுரம், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 44; மீனவர்.இவர், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் படகில், நேற்று காலை 6:00 மணியளவில், சிலருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார்.அப்போது, திடீரென படகு கவிழ்ந்து, நீரில் விழுந்த கதிர்வேலை உடனிருந்தோர் மீட்டு, கோவளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் அவரை பரிசோதித்து, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.