உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடலூர் காடுகளில் கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கூடலூர் காடுகளில் கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி கூடலுார் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2 கி,மீ., துாரம் உள்ள கூடலுார்- கோவிந்தாபுரம் செல்லும் ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையை கோவிந்தாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர் வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மருதேரி-- சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலை. கூடலுார் ஏரிக்கரை சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !