உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

சிங்கபெருமாள் கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் சந்தைமேட்டு தெருவில் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகம், 1996ல் கட்டப்பட்டது. இதில் சிறுகதைகள், இலக்கியங்கள், வரலாற்று புத்தகங்கள் என, 40,000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இல்லத்தரசியர் 2,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நுாலக கட்டடம், சாலையை விட மூன்று அடி தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.கட்டடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளை கடந்ததால், சுவர்கள் மற்றும் மேல் தளங்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜன்னல் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது.இது குறித்து வாசகர்கள் கூறியதாவது:நுாலக கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சுவர்களில் ஈரப்பதம் உள்ள போது மின்சாரம் பாய்வதும் தொடர்கிறது.கட்டடம் சேதமடைந்து உள்ளதால், போட்டி தேர்வுகளுக்கு குறிப்பு எடுக்க வருவோர், அமர்ந்து படிக்க அச்சப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக நவீன நுாலக கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை