மேலும் செய்திகள்
உண்டியல் திறப்பு
23-Sep-2025
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விழா மற்றும் முகூர்த்த நாட்களில், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை, வெள்ளிப் பொருட்களை, உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். கோவிலில், மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன. கடந்த 8ம் தேதி, செங்கல்பட்டு உதவி கமிஷனர் ராஜலட்சுமி, திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் குமரவேல், செங்கல்பட்டு ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், 11 உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரூபாய், 294 கிராம் தங்கம், 6,400 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன. தொடர்ந்து, நேற்று முன்தினம் துலாபார உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 3 லட்சத்து 62 ஆயிரத்து 565 ரூபாய் கிடைத்துள்ளது.
23-Sep-2025