மேலும் செய்திகள்
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
27-Mar-2025
செங்கல்பட்டு:பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில், இன்று மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.அரசு நடத்தும் மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடக்கிறது.இம்மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம், வண்டலுார் தாலுகா, கூடுவாஞ்சேரி குறுவட்டம், ஒத்திவாக்கம் அடுத்த பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் கிராமவாசிகள் பங்கேற்று, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
27-Mar-2025