ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பல்லாவரம்:செங்கல்பட்டு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு சார்பாக, ஆணவ படுகொலையை கண்டித்து, பல்லாவரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறையில், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வைரமுத்து என்பவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும், கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.