உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி வளாகத்தில் புதர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை

பள்ளி வளாகத்தில் புதர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கத்தில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், மார்வர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளியில், பயன்பாடு அற்ற கட்டடங்கள் உள்ள பகுதியில், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது. இப்பகுதி, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது.எனவே, புதர்களை அகற்றி, அப்பகுதியில் நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !