உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொத்தேரியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க கோரிக்கை

பொத்தேரியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:பொத்தேரி - கோனாதி சாலையில் ரயில்வே கடவுப்பாதையில் சுரங்க பாதை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ரயில் நிலையம் அருகில் பொத்தேரி - கோனாதி சாலை உள்ளது. இந்த சாலையை கோனாதி, காவனூர், ஒரத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொத்தேரி பகுதியில் தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ - மாணவியர், பணிபுரிவோர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மக்கள் ரயில்வே கடவுப்பாதையை டூ - வீலரில் கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: செங்கல்பட்டு -- தாம்பரம் தடத்தில் தினமும் 60 புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் 60 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்கள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த ரயில்வே கேட் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஜி.எஸ்.டி.,சாலை வரை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை