உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வட்டார போக்குவரத்து அலுவலகம் திருப்போரூரில் அமைக்க கோரிக்கை

வட்டார போக்குவரத்து அலுவலகம் திருப்போரூரில் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்,:திருப்போரூர் தாலுகாவில், எட்டு லட்சத்திற்கு மேல் இருசக்கர வாகனம், ஆறு லட்சம் நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் ஒன்றியம் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒன்றியமாக உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. திருப்போரூர் தாலுகாவில் இருந்து, தினமும் 200க்கும் மேற்பட்டோர் ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், தடையில்லா சான்று, கனரக வாகன உரிமம் என, பல்வேறு பணிகளுக்காக, 40 கி.மீ., துாரத்தில் இருந்து, செங்கல்பட்டு அடுத்த பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.இதனால், போக்குவரத்து செலவு, கால விரயம் ஏற்படுகிறது. மேலும், திருப்போரூர் தாலுகாவிலிருந்து, பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம், 40 கி.மீட்டர் தொலைவில் இருப்பதாலும், அதிகமான ஊர் எல்லைகள் உள்ளதாலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகின்றன.போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால், அவ்வப்போது, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.மேலும், 2,500 போக்குவரத்து வாகனமும், 7,500 போக்குவரத்து அல்லாத வாகனமும் இருந்தால் போக்குவரத்து யூனிட் அலுவலகம் அமைக்க சாத்தியம் உள்ளது என, துறை அமைச்சர் சட்டசபையில் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், லட்சக்கணக்கான வாகனம் இருந்தும், போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, திருப்போரூர் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக மக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், கோரிக்கை மனுக்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, திருப்போரூர் தாலுகாவில், உடனடியாக ஒரு யூனிட் அலுவலகமாக மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி