உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருநாய்கள் கடித்து புள்ளி மான் பலி

தெருநாய்கள் கடித்து புள்ளி மான் பலி

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்திலுள்ள தனியார் கல்குவாரி அருகே நேற்று, மான் குட்டி ஒன்றை தெருநாய்கள் துரத்திக் கடித்துள்ளன.இதைப் பார்த்த அப்பகுதிமக்கள், அந்த நாய்களை விரட்டி மான் குட்டியை மீட்டனர்.ஆனால், நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த மான் குட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இதுகுறித்து வனத்துறையினருக்கு, தகவல் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மான் குட்டியை மீட்டு, காட்டுதேவாத்துார் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, கொல்லத்தநல்லுார் காப்புக்காட்டில் புதைத்தனர்.6 மாத வயதுடைய இந்த ஆண் புள்ளிமான் குட்டி, தாயிடம் இருந்து பிரிந்து வந்ததால், தெரு நாய்கள் கடித்து இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ