உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வருவாய் துறையினர் போராட்டம்

வருவாய் துறையினர் போராட்டம்

திருப்போரூர், திருப்போரூர் தாசில்தார் அலுவலகம் முன், தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு என, புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில், திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கரும்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ