புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
செங்கல்பட்டு;செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட்டு சாலையில் உள்ள கடையில், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள பழனி, 57, என்பவரின் கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, பழனி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.