மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
08-Jul-2025
மறைமலை நகர்:முன்னாள் சென்ற லாரியில் கார் மோதி, இருவர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் அவுணியாபுரத்தை சேர்ந்தவர் அபிலாஷ், 30. அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார், 27. இருவரும் மறைமலை நகரில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். அபிலாஷ் ஸ்டுடியோவிலும், தினேஷ் குமார் கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை இருவரும் மாருதி சுசுகி செலிரோயோ காரில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர். காட்டாங்கொளத்துார் போக்குவரத்து சிக்னல் அருகில் முன்னே சென்ற லாரியை கடக்க முயன்ற போது லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08-Jul-2025