உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோட்டைக்காடு அரசு பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தல்

கோட்டைக்காடு அரசு பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தல்

செய்யூர்:கோட்டைக்காடில், சாலை விரிவாக்கத்திற்கு பள்ளி கட்டடம் அகற்றப்பட உள்ளதால், புதிய கட்டடம் அமைக்க இடம் தேர்வு செய்து, கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கோட்டைக்காடு, வேம்பனுார் போன்ற பகுதிகளில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, பள்ளி வளாகம் முழுதும் கையகப்படுத்த, அளவீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இழப்பீட்டுத் தொகை, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மாற்று இடம் தேர்வு செய்யப்படாததால், பள்ளிக்கு தற்போது வரை புதிய கட்டடம் அமைக்கப்படவில்லை. கோட்டைக்காடு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு சொந்தமான 60 சென்ட் இடத்தில் பள்ளி கட்டடம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பள்ளி கட்டடம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப் படுகிறது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய பள்ளி கட்டடம் அமைக்க இடம் தேர்வு செய்து, கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ