உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

மறைமலை நகர்:கொண்டமங்கலம் சாலையில் சேதமடைந்துள்ள சிறு பாலத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொண்டமங்கலம் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக கோவிந்தாபுரம் - அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள சிறு பாலம் வழியாக கொண்டமங்கலம் ஏரியில் இருந்து சுற்றியுள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் பா லம் சேதமடைந்துள்ளது . இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கொ ண்டமங்கலம், தர்காஸ், தாசரி குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வர இச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர் . சாலையில் உள்ள சிறு பாலம் சேதமடைந்து உள்ளது. எனவே சிறு பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி