உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேடந்தாங்கலில் ரூ.10 லட்சத்தில் பயணியருக்கு உணவருந்தும் கூடம்

வேடந்தாங்கலில் ரூ.10 லட்சத்தில் பயணியருக்கு உணவருந்தும் கூடம்

மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு வேடந்தாங்கல் ஊராட்சி அமைந்துள்ளது. அந்த ஊராட்சிக்கு உட்பட்டு சித்தாத்துார், துறையூர், விநாயக நல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.தீண்டாமை கடைபிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும், ஒரு ஆதிதிராவிடர் கிராமமாக, வேடந்தாங்கல் ஊராட்சி, தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, வேடந்தாங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.அதில், தீண்டாமை கடைபிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு பரிசு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2023 --- 24 ல், வேடந்தாங்கல் ஊராட்சிக்கு, மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன், 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.அந்த நிதியைக் கொண்டு, குடிநீர் வசதி செய்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதை வசதி மேம்பாடு செய்தல், பள்ளி கட்டடம் சீரமைத்தல், கால்நடை தண்ணீர் தொட்டி கட்டுதல், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மைய கட்டடம் கட்டுதல் மற்றும் புதிய விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏதேனும், பணிகளை செய்து கொள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டது.சுற்றுலாப் பயணியர் பயன்பெறும் வகையில் உணவருந்தும் கூடம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவியர் மற்றும் சுற்றுலா பயணியர் கொண்டு வரும் உணவுகளை, ஓரிடத்தில் அமர்ந்து உணவு அருந்தும் வகையில், உணவு அருந்தும் கூடம் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்லும் சாலையில், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்று பூமி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி