உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே பெரியவெளிக்காடு கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.மேலும், இப்பகுதி கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.அங்கன்வாடி மைய கட்டடத்தின் பின்புறத்தில் ஏரி உள்ளது. ஆனால், மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், நீர்நிலைகள் மற்றும் அருகே உள்ள முட்புதர்களில் இருந்து, விஷப்பூச்சிகள் வலம் வர வாய்ப்பு உள்ளது.அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ