உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செம்மஞ்சேரியில் தொழிலாளி உயிரிழப்பு

செம்மஞ்சேரியில் தொழிலாளி உயிரிழப்பு

செம்மஞ்சேரி, வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், செம்மஞ்சேரியில் உள்ள நண்பரை பார்க்க சென்றார்.அங்கு தங்கியவர், நேற்று செம்மஞ்சேரி - புதுச்சேரி சாலையில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாத அருள்தாஸ், குளத்தில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி