உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  குட்கா விற்ற வாலிபர் கைது

 குட்கா விற்ற வாலிபர் கைது

மறைமலை நகர்: மறைமலை நகர் என்.ஹெச் - 2 பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த, 6 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். குட்கா விற்ற, கடையின் உரிமையாளரான முகமது பரிக், 20, என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்