உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் அரசு கல்லுாரியில் 24ல் 2ம் கட்ட கலந்தாய்வு

குன்றத்துார் அரசு கல்லுாரியில் 24ல் 2ம் கட்ட கலந்தாய்வு

குன்றத்துார், குன்றத்துார் அரசு கலைக்கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வில், 80 மாணவர்கள் தேர்வாகிய நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவங்குகிறது.குன்றத்துாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, 2024- - 25ம் கல்வி ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கம்பியூட்டர் சயின்ஸ், பி.காம்., - பி.பி.ஏ., ஆகிய படப்பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 240 இடங்களுக்கு, 6,346 மாணவ - மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர்.முதற்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பேராசிரியர் குழுவினர் மாணவர்களின் சான்றுகளை சரிபார்த்து, 80 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றது.இதையடுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, 25, 26ம் தேதி நடைபெற உள்ளதாக கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி