உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில ஜூனியர் தடகளம் 3,500 வீரர்கள் பங்கேற்பு

மாநில ஜூனியர் தடகளம் 3,500 வீரர்கள் பங்கேற்பு

சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 36வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, நாளை துவங்குகிறது. போட்டிகள், பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட மாநிலம் முழுவதும் இருந்து, 3,500 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.போட்டியில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 150க்கு மேற்பட்ட வகையான போட்டிகள் நடக்கின்றன. இந்நிகழ்வில் 2,500 வீரர் - வீராங்கனையர் ஒன்றிணைந்து, விளையாட்டு போட்டிகளில் ஊக்க மருத்து தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க உள்ளனர்.இந்நிகழ்வை உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் 7ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடக்கின்றன என, தமிழ்நாடு தடகள சங்கம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ