உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில்களில் 80.87 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரயில்களில் 80.87 லட்சம் பேர் பயணம்

சென்னை, சென்னையில், மெட்ரோ ரயில்களில் தினமும் 2.70 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதத்தில் 80 லட்சத்து 87 ஆயிரத்து 712 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 5 லட்சத்து 94 ஆயிரத்து 745 பேர் குறைவாகும்.விடுமுறை, வெயில் தாக்கம் போன்றவற்றால், பயணியரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 8ம் தேதி அதிகபட்சமாக, 3 லட்சத்து 24 ஆயிரத்து 055 பேர் பயணம் செய்து உள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யூ.ஆர்., குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33 லட்சத்து 34 ஆயிரத்து 498 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 33 லட்சத்து 23 ஆயிரத்து 602 பேரும் பயணித்து உள்ளனர்.அதேபோல் , டோக்கன்களை பயன்படுத்தி 61,976 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4,285 பேரும், தேசிய பொது இயக்க அட்டை பயன்படுத்தி 13 லட்சத்து 63 ஆயிரத்து 351 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்