உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி போலீசார் அதிரடி 52 ரவுடிகள் கைது

ஆவடி போலீசார் அதிரடி 52 ரவுடிகள் கைது

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் ரவுடிகள் வேட்டை நடந்தது.அதன்படி கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 52 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.இதில், செங்குன்றம் மற்றும் ஆவடி காவல் வட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு ரவுடிகள், மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.அதே போல், பழைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 44 பேர் உட்பட, ஒரே நாளில் 52 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 30ம் தேதி, 130 ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என, கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி