மேலும் செய்திகள்
கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு
11-Feb-2025
சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று விளையாட்டு விழா நடந்தது. இதில், மாணவ - மாணவியர் அணி வகுப்பு நடத்தி, ஒலிம்பிக் தீபம் ஏற்றினர்.ஈட்டி சுற்றுதல், சுருள் வீச்சு, மான் கொம்பு விளையாட்டு, கோடரி விளையாட்டு, கத்தி சண்டை, சிலம்பத்தில் 5 மீட்டர் ரிப்பன் அலங்காரம், சிலம்பம் சண்டை, தீ ஊதுதல், வளையம் வைத்து கூடை கட்டுதல் போன்ற சாகசங்களை, 35 மாணவ - மாணவியர் அரங்கேற்றினர்.இவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில், கவுன்சிலர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
11-Feb-2025