உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் தகராறு வாலிபருக்கு வெட்டு

போதையில் தகராறு வாலிபருக்கு வெட்டு

தாம்பரம், மேற்கு தாம்பரம், வைகை நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 27; டாடா ஏஸ் வாகன ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, அதீத மதுபோதையில், காந்தி நகர், மீனாம்பாள் தெருவில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அதேபோல், மாந்தோப்பு, சிவராஜ் தெருவைச் சேர்ந்த வேலன், 21, என்பவரிடம் வீண் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்தவர் வேலன், அவரது நண்பர்கள் தினேஷ் மற்றும் சிவா ஆகியோர் சேர்ந்து, கார்த்திக்கை கத்தியால் வெட்டி தப்பினர். இதில், பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை