உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகள்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு 5 ஆண்டு சிறை

மகள்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு 5 ஆண்டு சிறை

சென்னை, சென்னை, தி.நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 16, 10 வயதில் மகள்கள் உள்ளனர். சிறுமியர் இருவரையும், 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில், அவரது தந்தை பல முறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.சிறுமியருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர்களின் தாய் டாக்டரிடம் அழைத்து சென்றார். அப்போது, பிறப்புறுப்பு நோய் தொற்றால் சிறுமியர் பாதிக்கப்பட்டு இருப்பதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்தது.இதையடுத்து, சிறுமியரின் தாய் புகாரின்படி, தி.நகர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், மகள்களுக்கு, அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து, சிறுமியரின் தந்தைக்கு எதிராக, 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. போலீஸ் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலெட்சுமி, 'சிறுமியரின் தந்தை மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு, அரசு 5 லட்சம் ரூபாயும், மற்றொரு சிறுமிக்கு 10 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை