உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணகி நகரில் ஏசி வசதியுடன் நுாலகம்

கண்ணகி நகரில் ஏசி வசதியுடன் நுாலகம்

கண்ணகி நகர், கண்ணகி நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 23,704 வீடுகள் உள்ளன. இங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய நுாலகம் அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நுாலகம் கட்ட 11,158 சதுர அடி பரப்பு இடத்தை வாரியம் ஒதுக்கியது. இதில், 'ஏசி' வசதியுடன் மாடர்ன் நுாலகம் அமைக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், 8,633 சதுர அடி பரப்பில், இரண்டடுக்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்து, ஜூன் மாதம் இறுதியில் பணி துவங்கும் வகையில், வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி