உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.79 கோடி மோசடி  இருவருக்கு காப்பு

ரூ.2.79 கோடி மோசடி  இருவருக்கு காப்பு

ஆவடி, புழல், கன்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவன், 57. இவர், கடந்த 5ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.அதில் குறிப்பிட பட்டிருந்ததாவது: கடந்த 2022 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, விருப்பாச்சி என்பவரிடம் மளிகை பொருட்கள் சப்ளை செய்வதாக கூறினார். இதற்காக 1.69 கோடி ரூபாய் கொடுத்தேன். ஆனால், பொருளும் வினியோகம் செய்யவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.இதன்படி, திருவள்ளூர் மாவட்டம், ஒரக்காடைச் சேர்ந்த விருப்பாச்சி, 45, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.பெரவள்ளூர், ஜவஹர் நகரில் ஷீன்லாக் பெயின்ட்ஸ் லி., நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் அரபிந்தோ, 41.கடந்த 2022ல், திருவள்ளூர், கொல்லமேடு பகுதியில் 'குட்வில் மெட்டல் ஸ்ட்ரக்சர்' நிறுவனத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ், 48, என்பவருக்கு 'ஷெட்' அமைக்க 1.10 கோடி ரூபாய் திருப்பி தராமல் ஏமாற்றியதாக, அரபிந்தோ, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.ஜெய்கணேஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை