வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லா தொழிச்சாலையும் சீனாவுக்கு/வியட்நாம்/தாய்லாந்து ஏன் போகுது தெரியுதா ? CITU ஒழிந்தால் தான் நாடு உருப்படும்
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரத்தில், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும், 'சாம்சங்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.இந்த நிலையில், எட்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, 'சாம்சங்' தொழிலாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் போராட்டத்தை துவக்கினர். அவர்களின் கோரிக்கை வருமாறு:சி.ஐ.டி.யு., எனும் இந்திய தொழிற்சங்க மையத்தை அங்கீகரிக்க வேண்டும். சி.ஐ.டி.யு., உறுப்பினர்களை, போட்டி தொழிலாளர் சங்கத்தில் இணையுமாறு கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.சாம்சங் நிறுவனத்தில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல், தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, எட்டு மணி நேர பணி வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், சாம்சங் நிர்வாகம் மற்றும் சி,ஐ,டி,யு., தொழிற்சங்கம் உடனான சமரச பேச்சு, இருங்காட்டுக்கோட்டை உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துணை ஆணையர் கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தர்ராஜன், மாநில செயலர் முத்துக்குமார், தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலை ஆலோசனை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சவுந்தர்ராஜன் கூறியதாவது:பெரும்பான்மை ஊழியர்கள் உள்ள குழுவினை அழைத்து கோரிக்கை குறித்து பேச்சு நடத்த வேண்டும். எங்களின் முதன்மையான இந்த கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் பேச்சு தோல்வி அடைந்தது. எனவே, போராட்டம் தொடரும். அடுத்த கட்ட பேச்சு, நாளை மறுதினம், 13ம் தேதி மேற்கொள்வது என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
எல்லா தொழிச்சாலையும் சீனாவுக்கு/வியட்நாம்/தாய்லாந்து ஏன் போகுது தெரியுதா ? CITU ஒழிந்தால் தான் நாடு உருப்படும்