உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மடிப்பாக்கத்தில் சிறப்பு முகாம்

குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மடிப்பாக்கத்தில் சிறப்பு முகாம்

மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலத்தின்,188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முதல் கட்டமாக, 1,700 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின், பெருங்குடி மண்டலம், 187, 188வது வார்டுகளுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டப் பணி நிறைவடைந்துள்ளது. இதற்காக, வேளச்சேரி-தாம்பரம் சாலை, மயிலை பாலாஜிநகரில் பிரம்மாண்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.அதிலிருந்து மடிப்பாக்கம் பகுதிக்கு இணைப்பு கொடுத்த நிலையில், கடந்த மாதம் நீர் செலுத்தி கசடுகள் அகற்றப்பட்டன. பின், மடிப்பாக்கம், ராஜலட்சுமிநகர், ராஜராஜேஸ்வரிநகர், மகாலட்சுமிநகர், டாக்டர் ராமமூர்த்தி நகர், பெரியார்நகர், கோவிந்தசாமிநகர், அண்ணாநகர், செந்தில்நகர் ஆகிய பகுதிகளில் சோதனை வெள்ளோட்டம் முடிந்து உள்ளது.இந்நிலையில், இணைப்பு கொடுக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன. அதற்காக, 188வது வார்டில் நேற்று குடிநீர் இணைப்பு வழங்கும் முகாம் நடந்தது. இதில், சம்பந்தப்பட்ட பகுதிவாசிகள் பங்கேற்றனர்.அவர்களின் குடிநீர் இணைப்பிற்கான ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதையடுத்து, குடிநீர் இணைப்பு வழங்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.குடிநீர் வாரியத்தினர் கூறியதாவது:பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் உள்ள 187, 188 ஆகிய இரண்டு வார்டிலும், 9,000 குடியிருப்புகள் உள்ளன. இதனை பத்து கட்டமாக பிரித்து, குடிநீர் வினியோகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 1,700 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Manmohan C R
ஜூன் 10, 2024 19:11

Sewage work connections at Streets in Baliah Garden Madipakkam were taken one year back and just completed before election in a hurried manner. Kumaran Street, Padmavathi Streets were left without relaying the road while other roads were metal tapped. Public mostly senior citizens suffer in walking riding because the earth taken for laying pipes without proper filling and if it rains the potholes filled with rain water posing danger. The complaint was also lodged with CMs cell at Sectt. TN.No action taken so far. The water pipe lines connected were cut during earth digging for sewage pipe lines and left un attended. Pl send your reporter to view the condition of roads in this area.


Sridhar
ஜூன் 10, 2024 15:40

தயவு செய்து மடிப்பாக்கம் மிக முக்கிய தெருவான சத்தங்கம் தெருவிற்க்கு வந்து பார்க்கச்சொல்லுங்கள்.. போன வருடம் டிசம்பர் பெய்த மழையில் எங்கள் வீட்டின் வாசலில் தோண்டி வைத்து விட்டு போனார்கள்.. இன்னும் இன்றுவரை அதை மூடாமல் நாங்கள் படும் வேதனை எவ்வளவு என்று நேரீல் வந்து பார்க்கவும்.. கொசுவும் பூச்சியும் பாம்பும் காட்டுகின்றது.. அருகில் சத்சங்கம் வேறு. இந்த அரசுக்கு இது ஒரு எங்கள் வேண்டுகோள்.


Balasubramanian Seshadri
ஜூன் 09, 2024 19:12

எனக்கு 19மார்ச்2021 வாட்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது அனால் எதுல வரை தெண்ணீர் வரவில்லை நோ பதில் பிரேம் மெட்ரோ ஆபீஸ் ....


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி