உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஷ வண்டு கடித்து சிறுவன் பலி

விஷ வண்டு கடித்து சிறுவன் பலி

திருவள்ளூர், திருவள்ளுர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கார்த்திக் கிரிஷ், 6, திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். முனுசாமி வீட்டின் அருகே மரம் வெட்டி கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, விஷ வண்டு கடித்தது. இதனால், திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தார். செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ