உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்புலன்ஸ் ஊழியரின் கைப்பை திருட்டு

ஆம்புலன்ஸ் ஊழியரின் கைப்பை திருட்டு

ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி தெருவில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருப்பவர் நித்யஸ்ரீ, 22 ; '108' ஆம்புலன்ஸ் சேவை ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பாரதி சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்ற தோழியை பார்க்க நித்யஸ்ரீ, தன் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.அவரிடம் பேசிவிட்டு திரும்பும் போது, வாகனத்தில் வைத்திருந்த, 3 கிராம் கம்மல் அடங்கிய கைப்பையை, மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. இதுகுறித்து, ஜாம்பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ