உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி பலி

மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி பலி

அண்ணா நகர், அண்ணா நகர், 'ஒய் பிளாக்' முதலாவது தெருவில், ஐந்து தளம் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இங்கு, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது முஸ்தான், 50, அவரது உறவினர்கள் கட்டட தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, முகமது முஸ்தான் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மது அருந்திவிட்டு, முதலாவது தளத்தில் துாங்கியுள்ளனர்.அப்போது, போதையில் எழுந்து சென்ற முகமது முஸ்தான், எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை