உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் மெட்ரோவுக்காக இடமாற்றம்

ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் மெட்ரோவுக்காக இடமாற்றம்

சென்னை:சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணியில், மூன்று வழித்தடங்களில் மாதவரம் - சிறுசேரி வழித்தடமும் ஒன்று. இந்த தடத்தில், ஆயிரம்விளக்கு பகுதியில் மெட்ரோ நிலையம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறியதாவது: ஆயிரம்விளக்கு பேருந்து நிறுத்தம், ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை - அண்ணாசாலை சந்திப்பில் உள்ளது. இங்கு, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், தற்காலிகமாக ஆயிரம்விளக்கு பேருந்து நிறுத்தம் திரு.வி.க., சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. பாரிமுனையில் இருந்து - சைதாப்பேட்டை, கிண்டி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், திரு.வி.க., சாலை வழியாக சென்று பீட்டர்ஸ் சாலையில் வலது புறம் திரும்பி, பின் அண்ணாசாலை வழியாக செல்லும்படி மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை