உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ள-மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். இந்தாண்டு, 12வது திருக்கல்யாண உற்சவம் செப்.,1ல் நடக்கிறது. அன்று காலை 6:00 மணி முதல் விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் அபிஷேகம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு மூவலருக்கு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வள்ளி மணவாளருக்கு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. நண்பகல் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள், திருக்கல்யாண சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை