உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் - லாரி மோதி விபத்து இருவர் பலி

பைக் - லாரி மோதி விபத்து இருவர் பலி

திருப்போரூர், ஆந்திராவைச் சேர்ந்தவர் ஹரிஷ், 19; செங்கல்பட்டு மாவட்டம் படூர் தனியார் கல்லுாரியில், பி.இ., கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவர். இவரின் நண்பர் ஷேக்லால் பாஷா, 27, அதே கல்லுாரியில் பணியாற்றி வந்தார்.இருவரும், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, 'ராயல் என்பீல்டு' பைக்கில் கோவளத்திலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்றனர்.அப்போது, பகிங்ஹாம் கால்வாய் அருகே, எதிரே வந்த 'ஸ்விப்ட் டிசைர்' காரில் எதிர்பாராதவிதமாக பைக் மோதியது.இதில் நிலை தடுமாறிய பைக் மீது, காருக்கு பின்னால் வந்த லாரி மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.போலீசார், கார் மற்றும் லாரி ஓட்டுனர்களிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை