உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிணற்றில் குளித்த இருவர் பலி

கிணற்றில் குளித்த இருவர் பலி

கூடுவாஞ்சேரி, ஷெனாய் நகர், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரதீப், 24. இவர், அமைந்தகரையைச் சேர்ந்த கார்த்திக், 30, அஜித், 28, பாலாஜி, 28, வசந்த், 26, பிரகாஷ், 25, வினோத், 33, ஆகிய நண்பர்களுடன், கொளப்பாக்கம் சென்று மது அருந்திஉள்ளார். பின், ஊனமாஞ்சேரி செல்லும் சாலையில், வேம்புலி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், அனைவரும் குளித்துள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாத பிரதீப், கிணற்றில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற கார்த்திக்கும் நீரில் மூழ்கினார்.கிளாம்பாக்கம் போலீசார், மறைமலை நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து, கிணற்றில் மூழ்கிய பிரதீப் மற்றும் கார்த்திக்கை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் இறந்தது தெரிந்தது.இருவரது உடல்களையும் கைப்பற்றிய கிளாம்பாக்கம் போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி