உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயனற்ற இ - கழிப்பறைகள் மக்களின் வரிப்பணம் வீண்

பயனற்ற இ - கழிப்பறைகள் மக்களின் வரிப்பணம் வீண்

கீழ்ப்பாக்கம்,:பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், எளிதாக பயன்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி 'இ - டாய்லெட்' வசதியை அறிமுகப்படுத்தியது.இந்த கழிப்பறைகள் அனைத்தும் பராமரிப்பு இன்றியும், பல இடங்களில் பாழடைந்த நிலையிலும் காட்சிப் பொருளாகவே உள்ளன.குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம் வில்லிவாக்கத்தில் ஐ.சி.எப்., - எம்.டி.எச்., சாலை, திருமங்கலம் பகுதியில் 'இ - டாய்லெட்' கழிப்பறைகள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சீரழிந்து கிடக்கின்றன.இதேபோல், கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் பகுதியிலும், பல மாதங்களாக கழிப்பறைகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. சமூக ஆர்வலர்கள் கூறியாதாவது:அண்ணா நகரில் மட்டுமில்லாமல், கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், பல ஆண்டுகளாக இந்த நவீன கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.சில இடங்களில் போதிய தண்ணீர் இல்லாததால், பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகளைச் சுற்றி, பலர் சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். இங்கிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், சாலையில் செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.புதிதாக கழிப்பறைகள் கட்ட, மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தும் நிலையில், இதுபோன்ற கழிப்பறைகளையும் முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை