மேலும் செய்திகள்
குறைதீர் முகாம்: 22 மனுக்கள் ஏற்பு
18-Sep-2025
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, 206 பேரிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் அருண், அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இம்முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திரபிதாரி, துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
18-Sep-2025