உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 6ல் மெரினாவில் ஏர் ஷோ கூடுதலாக 300 பஸ்கள் இயக்கம்

வரும் 6ல் மெரினாவில் ஏர் ஷோ கூடுதலாக 300 பஸ்கள் இயக்கம்

சென்னை, இந்திய விமானப்படை, அதன் 92வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வரும் 6ம் தேதி காலை 11:00 மணி முதல், சென்னை மெரினா கடற்கரையில், விமானங்கள் வாயிலாக பிரமாண்ட வான்வெளி சாகச நிகழ்ச்சி நடத்துகிறது.இந்திய விமானப்படையின் 72 வகை விமானங்கள், காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட உள்ளது.இதை காண, சென்னை மற்றும் மற்ற புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு வசதியாக, பல வழித்தடங்களில் இருந்து மெரினாவுக்கு கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது.இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், மெரினா கடற்கரைக்கு வழக்கமாக செல்லும் பேருந்துகளைவிட, 200 சிறப்பு பேருந்துகளை இயக்குவோம்.இதற்கிடையே, வரும் 6ம் தேதி நடக்க உள்ள விமான சாகச நிகழ்வை காண வரும் பயணியருக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளோம்.மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளோம். பேருந்துகளை ஒழுங்குப்படுத்தி இயக்க, அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி