மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 31 பேர் மனு
சென்னை, :சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.இதில், போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 31 மனுக்களை பெற்றார்.பின் பெறப்பட்ட மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்நிகழ்வில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரகள் உடன் இருந்தனர்.