உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 சவரன் மீட்பு ஒருவர் கைது

4 சவரன் மீட்பு ஒருவர் கைது

கொளத்துார்:கொளத்துார் ராஜமங்கலம் மக்காரம் தோட்டம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சரஸ்வதி, 55. இவர்களது வீட்டின் ஒரு பகுதியில், அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக், 40 என்பவர் வாடகைக்கு இருந்தார். சரஸ்வதி தன் வீட்டு பீரோவில் இருந்த, 4 சவரன் நகையை காணவில்லை என, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகையை, வாடகைக்கு இருந்த கார்த்திக் திருடியது விசாரணையில் தெரிந்தது. கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்