குறைதீர் முகாமில் 69 மனு ஏற்பு
ஆவடி,ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. முகாமில், கமிஷனர் சங்கர் பொதுமக்களிடம் இருந்து 69 மனுக்கள் பெற்று, அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார். இந்த முகாமில், போலீசார் மற்றும் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.