புதருக்குள் வீசப்பட்ட பயணியர் நிழற்குடை
திருவொற்றியூர்:திருவொற்றியூர், ஜோதி நகர் பேருந்து நிறுத்தத்தை, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பயணியர் வசதிக்காக, 13 லட்ச ரூபாய் செலவில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. மழை - வெயில் போன்ற காலங்களில், இந்த நிழற்குடை பயணிருக்கு வசதியாக இருந்தது.இதனிடையே, மழைநீர் வடிகால் பணிக்காக பெயர்த்தெடுக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, புதருக்குள் வீசப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர், வெயிலிலும், மழையிலும் அவதியுற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து, நிழற்குடையை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.