உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் தகராறு: போதை ஆசாமி கைது

பெண்ணிடம் தகராறு: போதை ஆசாமி கைது

அயனாவரம்:அயனாவரம், கே.கே.,நகரைச் சேர்ந்தவர் செல்வி, 50. இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே செல்வி நடந்து சென்றார்.அப்போது, கே.கே.,நகரைச் சேர்ந்த ரவுடி சூர்யா, 27, என்பவர், போதையில் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளார். இது குறித்து அயனாவரம் போலீசில் செல்வி புகார் அளித்தார். விசாரித்த போலீசார், சூர்யாவை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ