உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி

நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி

ஊத்துக்கோட்டை, பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. இவர், நேற்று முன்தினம் மதியம், குடும்பத்துடன் ஊத்துக்கோட்டை அருகே மாளந்துார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். மாலையில் இருந்து அவரது மகன் ஜனார்த்தனம், 15, என்பவரை காணவில்லை.அருகில் உள்ள ஆரணி ஆற்றிற்கு சென்றதாக சிலர் கூறியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, ஆற்றின் சிறுவன் உடல் மிதந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்தது தெரிய வந்தது.இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். பெரியபாளையத்தை அடுத்த, கொசவன்பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51. நேற்று முன்தினம் மதியம் முதல் இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை