கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு
சென்னை, வி.ஏ.பி., கோப்பை முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடரில், நேற்று நடக்க இருந்த ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கிளப் மற்றும் எஸ்.கே.எம்., அணிகளுக்கான போட்டியும், மற்றும் மயிலாப்பூர் கிரிக்கெட் கிளப் - சீ ஹவுஸ் கிரிக்கெட் கிளப் இடையிலான போட்டியும், சென்னையில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்டன. அதில் மோதவிருந்த அணிகளுக்கு, தலா இரண்டு புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மற்ற போட்டிகள், வரும் நாட்களில் தொடர்ந்து நடத்தப்படும் என டி.என்.சி.ஏ., தெரிவித்துள்ளது.