க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
சூளைமேடு:பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிரா, 42; தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரி பேராசிரியை. நேற்று முன்தினம் இரவு, வீட்டு பீரோவில் வைத்திருந்த நகையை சரிபார்த்துள்ளார். அப்போது, 20 சவரன் மாய மானது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.